நேற்று (03) மாலை பெரிய செல்வகந்த பகுதியில் உள்ள நீரோடையில் தமது நண்பர்களுடன் நீராடச் சென்ற சிறுவனே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
தமது மேலதிக வகுப்புக்கு சென்று வீடு திரும்பும் வழியில் தனது 5 நண்பர்களுடன் நீராடச் சென்ற 14 வயதான சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுவன் மாத்தளையின் தம்பலகல்ல பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவனின் சடலம் மாத்தளை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கந்தேநுவர பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.